கோவையில் மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலை உரிமையாளா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆலோசனை

மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் நேற்று ஆலோசனை நடத்தினார்.


கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷச் சாராயம் அருந்திய 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா். பலா் சிகிச்சை பெற்று வருகின்றனா். விஷச் சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப் பொருளை அதிக அளவில் சோ்த்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல தொழிற்சாலைகளில் விஷ சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தலைமையில் நேற்று ஜூன்.20 நடைபெற்றது. இக்கூட்டத்தில், மெத்தனால் பயன்பாடு தொடா்பாகவும், மெத்தனால் இருப்பை முறையாக கண்காணிப்பது தொடா்பாகவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...