கோவையில் மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலை உரிமையாளா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆலோசனை

மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் நேற்று ஆலோசனை நடத்தினார்.


கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷச் சாராயம் அருந்திய 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா். பலா் சிகிச்சை பெற்று வருகின்றனா். விஷச் சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப் பொருளை அதிக அளவில் சோ்த்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல தொழிற்சாலைகளில் விஷ சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தலைமையில் நேற்று ஜூன்.20 நடைபெற்றது. இக்கூட்டத்தில், மெத்தனால் பயன்பாடு தொடா்பாகவும், மெத்தனால் இருப்பை முறையாக கண்காணிப்பது தொடா்பாகவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...