மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷச் சாராயம் அருந்திய 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா். பலா் சிகிச்சை பெற்று வருகின்றனா். விஷச் சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப் பொருளை அதிக அளவில் சோ்த்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல தொழிற்சாலைகளில் விஷ சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தலைமையில் நேற்று ஜூன்.20 நடைபெற்றது. இக்கூட்டத்தில், மெத்தனால் பயன்பாடு தொடா்பாகவும், மெத்தனால் இருப்பை முறையாக கண்காணிப்பது தொடா்பாகவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் பல தொழிற்சாலைகளில் விஷ சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த மெத்தனால் வேதிப்பொருளை உரிய முறையில் கையாளும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள 11 தொழிற்சாலைகளின் உரிமையாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் தலைமையில் நேற்று ஜூன்.20 நடைபெற்றது. இக்கூட்டத்தில், மெத்தனால் பயன்பாடு தொடா்பாகவும், மெத்தனால் இருப்பை முறையாக கண்காணிப்பது தொடா்பாகவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.