சேலம் கோட்டம் தெற்கு ரயில்வேயில் சிறப்பாக செயலாற்றியமைக்காக 3 துறைகளில் கேடயங்கள் பெற்றது

ஒவ்வொரு ஆண்டும், தெற்கு ரயில்வேயில் நடைபெறும் ரயில்வே வார விழாவின் போது பொறியியல், வணிகவியல், பணியாளர் துறை போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றிய கோட்டங்களுக்கு கேடயங்கள் வழங்கப்படுகின்றன. 

2016-17ம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையே, பொறியியல் திறன், சிறப்பான பயணிகள் வசதி மேம்பாடு, மற்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறு பொருட்கிடங்கு ஆகியவற்றிற்கான சுழற்கேடயங்களை சேலம் கோட்டத்தின் பொறியியல், வணிகவியல் மற்றும் பொருள்வாங்கு துறைகள் பெற்றுள்ளன. 



நேற்று (12.04.2017) சென்னையில் நடைபெற்ற தெற்கு ரயில்வே வார விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோஹிரி மேற்கண்ட மூன்று சுழற்கேடயங்களையும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா-விடம் சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மற்றும் சேலம் கோட்ட பொருள்வாங்கு துறை துணை மேலாளர் ஜி.சுந்தர்ராவ் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். 

மேற்கண்ட கேடயங்களை பெற்று சேலம் திரும்பிய சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின்-க்கு சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர் சார்பில் சேலம் ரயில்நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 



சேலம் கோட்டம் அனைத்து துறைகளிலும் இது போன்றே சிறப்பாக செயல்பட்டு வருவதாக சொன்ன சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா சேலம் கோட்டம் இது போன்ற பல்வேறு பரிசுகளை மேலும் வருங்காலத்தில் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...