ஒவ்வொரு ஆண்டும், தெற்கு ரயில்வேயில் நடைபெறும் ரயில்வே வார விழாவின் போது பொறியியல், வணிகவியல், பணியாளர் துறை போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றிய கோட்டங்களுக்கு கேடயங்கள் வழங்கப்படுகின்றன.
2016-17ம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையே, பொறியியல் திறன், சிறப்பான பயணிகள் வசதி மேம்பாடு, மற்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறு பொருட்கிடங்கு ஆகியவற்றிற்கான சுழற்கேடயங்களை சேலம் கோட்டத்தின் பொறியியல், வணிகவியல் மற்றும் பொருள்வாங்கு துறைகள் பெற்றுள்ளன.

நேற்று (12.04.2017) சென்னையில் நடைபெற்ற தெற்கு ரயில்வே வார விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோஹிரி மேற்கண்ட மூன்று சுழற்கேடயங்களையும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா-விடம் சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மற்றும் சேலம் கோட்ட பொருள்வாங்கு துறை துணை மேலாளர் ஜி.சுந்தர்ராவ் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
மேற்கண்ட கேடயங்களை பெற்று சேலம் திரும்பிய சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின்-க்கு சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர் சார்பில் சேலம் ரயில்நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் கோட்டம் அனைத்து துறைகளிலும் இது போன்றே சிறப்பாக செயல்பட்டு வருவதாக சொன்ன சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா சேலம் கோட்டம் இது போன்ற பல்வேறு பரிசுகளை மேலும் வருங்காலத்தில் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2016-17ம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் கோட்டங்களிடையே, பொறியியல் திறன், சிறப்பான பயணிகள் வசதி மேம்பாடு, மற்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறு பொருட்கிடங்கு ஆகியவற்றிற்கான சுழற்கேடயங்களை சேலம் கோட்டத்தின் பொறியியல், வணிகவியல் மற்றும் பொருள்வாங்கு துறைகள் பெற்றுள்ளன.

நேற்று (12.04.2017) சென்னையில் நடைபெற்ற தெற்கு ரயில்வே வார விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோஹிரி மேற்கண்ட மூன்று சுழற்கேடயங்களையும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா-விடம் சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மற்றும் சேலம் கோட்ட பொருள்வாங்கு துறை துணை மேலாளர் ஜி.சுந்தர்ராவ் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
மேற்கண்ட கேடயங்களை பெற்று சேலம் திரும்பிய சேலம் கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் பெருமாள் நந்தலால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின்-க்கு சேலம் கோட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர் சார்பில் சேலம் ரயில்நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் கோட்டம் அனைத்து துறைகளிலும் இது போன்றே சிறப்பாக செயல்பட்டு வருவதாக சொன்ன சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா சேலம் கோட்டம் இது போன்ற பல்வேறு பரிசுகளை மேலும் வருங்காலத்தில் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.