கோவையில் 3 இடங்களில் பெலிக்கான் சிக்னல்களை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

கோவையில், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, சி.ஜி.டி கல்லூரி, கரும்புக்கடை சாரமேடு சந்திப்பு ஆகிய 3 இடங்களில் புதிய பெலிக்கான் சிக்னல்கள் நிறுவப்பட்டு, பாலகிருஷ்ணன் அவற்றை தொடங்கி வைத்துள்ளார்.


கோவை: சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நகரகாக கோவை மாநகர் உள்ளது. கோவை மாநகர எல்லையில் 5 தேசிய நெடுஞ்சாலைகள் போக, 57.2 கிலோ மீட்டர் நீளமுடைய 6 மாநில நெடுஞ்சாலைகளும், 77 கிலோ மீட்டர் நீளமுடைய முக்கிய மாவட்ட சாலைகளும் மற்றும் 40.7 கிலோ மீட்டர் நீளமுடைய இதர மாவட்ட சாலைகளும் உள்ளன.

போக்குவரத்து நிர்வாகம் மற்றும் சாலைப்பாதுகாப்பு குறித்து கோவை மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளையும், புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக பாதசாரிகள் சுலபமாக போக்குவரத்து மிகுந்த சாலைகளை கடப்பதற்காக அவர்களே உபயோகித்துக் கொள்ளும் வகையில் பெலிக்கான் போக்குவரத்து சிக்னல்களை கோவை மாநகர போலீசார் நிறுவியுள்ளனர்.

இந்த நிலையில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம், பார்க்கேட், 100 அடி சாலையில் 1வது வீதி, சுங்கம் சந்திப்பு, வரதராஜா மில், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, கணபதி மூன்றாம் எண் பேருந்து நிறுத்தம், துடியலூர் மற்றும் புரூக்பீல்ஸ் மால் அருகில் என 9 இடங்களில் பெலிக்கான் சிக்னல்கள்ள் நிறுவப்பட்டுள்ளன.



இதனிடயே அவினாசி சாலையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அருகே, சி.ஜ.டி, கல்லூரி அருகே மற்றும் கரும்புக்கடை சாரமேடு சந்திப்பு ஆகிய 3 இடங்களில் பெலிக்கான் சிக்னல்கள் நிறுவப்பட்டன. இவற்றை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று ஜூன்.20 தொடங்கி வைத்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...