கோவையில் ரூ.42 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட நகைப்பட்டறை உரிமையாளரும், உறவினரும் பத்திரமாக மீட்பு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் குறைப்பாட்டுடன் தங்க வளையல் தயாரித்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த நபர்கள் நகைப்பட்டறை உரிமையாளா் மற்றும் அவரது உறவினரை காரில் கடத்திச்சென்று 45 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். இரண்டு பேரையும் மீட்ட போலீசார், கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை, ஆா்.எஸ்.புரம் பொன்னையராஜபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமார் (40). இவர் தங்க நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது சகோதரி சுதாவின் மகன் விஷ்ணுவாசன் (22). இவரும் செந்தில்குமாரின் நகைப்பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், செந்தில்குமார் மற்றும் விஷ்ணுவாசன் ஆகியோர் தங்களது வளா்ப்பு நாயுடன் காரில் திங்கள்கிழமை ஜூன்.17 இரவு சென்றனா். ஏ.கே.எஸ். நகா் வரை சென்று வருவதாக கூறிச் சென்ற இவா்கள் திடீரென மாயமாகினா். இதனால், அதிர்ச்சியடைந்த உறவினா்கள், பல்வேறு இடங்களில் தேடியும் அவா்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சுதாவுக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் செவ்வாய்க்கிழமை அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா் ஒருவர், உங்களது மகனையும், சகோதரரையும் கடத்திச் சென்றுள்ளதாகவும், நாங்கள் தங்க நகை தயாரித்து கொடுக்கும்படி கேட்டோம், ஆனால் குறைபாடுள்ள நகைகளை தயாரித்து கொடுத்துள்ளதால் இருவரையும் கடத்தியுள்ளோம். எனவே, இருவரையும் உயிருடன் விடுவிக்க ரூ.42 லட்சம் தர வேண்டும் என அந்த நபா் கூறியுள்ளார்.

இதற்கு சுதா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளார். பணம் கொடுத்தால் மட்டுமே இருவரையும் விடுவிப்போம் என மிரட்டியுள்ளார். பின் இது குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சுதா புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், செந்தில்குமார் மற்றும் விஷ்ணுவாசனை கடத்திச் சென்றது சிவகங்கையைச் சோ்ந்த தனபால், தனசேகா் என்பதும், கடத்தலுக்கு உதவியாக சதீஷ் என்பவா் இருந்ததும் தெரியவந்தது.

மேலும், பெண் ஒருவருக்கு தங்க வளையல்களை தயாரித்துக் கொடுக்குமாறு செந்தில்குமாரை சதீஷ் அணுகியுள்ளார். ஆனால், குறைபாட்டுடன் தயாரிக்கப்பட்ட நகைகளை அப் பெண்ணிடம் சதீஷ் கொடுத்ததாகவும், அந்தப் பெண்ணின் தூண்டுதலின் பேரிலேயே இந்த கடத்தல் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடத்தப்பட்ட இருவருடன் தனபால், தனசேகா் மற்றும் சதீஷ் ஆகியோர் சிவகங்கையில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர துணை ஆணையா் சரவணக்குமார் மேற்பார்வையில் தனிப் படை போலீஸார் ஜூன்.19 சிவகங்கை சென்றனா்.

இதையறிந்த அந்த கடத்தல் கும்பல் செந்தில்குமார், விஷ்ணுவாசன் ஆகியோரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இருவரையும் மீட்ட போலீஸார் தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனா்.

Newsletter

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...