ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி தொடரும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், மாவட்ட நிர்வாகங்கள் தலையீட்டு தீர்வு காண வலியுறுத்தி 10 இடங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூலைபெற்று கூலி அடிப்படையில் அதனை துணியாக நெசவு செய்துகொடுத்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 2014-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்படி கூலியை விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வலியுறுத்தியும், இதுவரை பிடித்தம் செய்த கூலித் தொகையை வழங்க வலியுறுத்தியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 2-ம் தேதிமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 12-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக, 1 லட்சத்து 25 ஆயிரம் விசைத்தற்கள் இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதுடன், நாள் ஒன்றுக்கு 22 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 250 கோடி ரூபாய்க்கும் மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த போராட்டம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் சோமனூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட 8 இடங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் 2 இடங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில், ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இல்லையெனில் பட்டினி சாவு ஏற்படும் நிலை உருவாகும் எனவும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...