கோவை மாநகராட்சியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தார் சாலை அமைக்கும் பணி, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (19.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாநகராட்சி ஆணையாளர், தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட லெண்டஸ் கார்டன் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.66.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள தார் சாலை பணியினையும், பிள்ளையார்புரம் பகுதியில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



வார்டு எண்.96-க்குட்பட்ட லோகநாதபுரம் ஆகிய பகுதிகளில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளையும்,



வார்டு எண்.94க்குட்பட்ட மாச்சம்பாளையம், துளிசி கார்டன் பகுதியில் சுமார் 12.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தெற்கு மண்டலம் வார்டு எண்.97க்குட்பட்ட செங்கோட்டையா நினைவு உயர்நிலைப்பள்ளி, வார்டு எண்.95க்குட்பட்ட என்.பி. இட்டேரி நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும்



வார்டு எண்.99க்குட்பட்ட போத்தனூர் செட்டிபாளையம் சாலை, மாநகராட்சி பூங்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாநகராட்சி ஆணையாளர், பெற்றுக்கொண்டு, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.



முன்னதாக, தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட குறிச்சி பிரிவு பகுதியில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அங்கன்வாடி மையத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பதையும் மற்றும் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்த பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.



மேலும், வார்டு எண் 100க்குட்பட்ட கணேசபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து கலந்துரையாடினார்.



அதனைத் தொடர்ந்து தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் வார்டு பகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள பாதாள சாக்கடை மூடிகளின் இருப்புகள் குறித்து ஆய்வு செய்த பின்பு



வார்டு எண்.94க்குட்பட்ட மாச்சம்பாளையம், ஆறுமுககவுண்டன் வீதியில் செயல்பட்டுவரும் நியாய விலைக்கடையினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு,



நியாய விலைக்கடையில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள், பொருட்கள் இருப்பு பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், வார்டு எண். 97-க்குட்பட்ட ஐயப்பா நகர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின்போது துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் க.சிவகுமார், தெற்கு மண்டலக்குழுத் தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், அப்துல் காதர், அஸ்லாம் பாஷா, குணசேகரன், உதவி நகரத் திட்டமிடுநர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவிப் பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...