தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு

தரவரிசை பட்டியலில் திவ்யா, சர்மிளா, மயூரன், நவீனா ஆகியோர் 200க்கு 200 மதிப்பெண் எடுத்து பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளனர். 8 பேர் இரண்டாம் இடம் பிடித்து உள்ளனர்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று ஜூன்.19 வெளியிடப்பட்டது. 4 பேர் 200 - க்கு 200 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்து உள்ளனர். 8 பேர் இரண்டாம் இடத்தைப் பிடித்து உள்ளனர்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இளநிலை பிரிவில் வேளாண்மை, தோட்டக் கலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் உள்ளன.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை பிரிவில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டன. அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 12 - ம் தேதி வரை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் பெறப்பட்டது.

இதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்வில் துணைவேந்தர் கீதாலட்சுமி பங்கேற்று தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.



தொடர்ந்து அவர் கூறும்போது, நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்காக 33 ஆயிரத்து 973 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 29 ஆயிரத்து 969 விண்ணப்பங்கள் தரவரிசை பட்டியலுக்கு ஏற்கப்பட்டன. அது தவிர முன்னாள் ராணுவத்தினருக்கான பிரிவில் 234 பேர், அரசு பள்ளியில் படித்தவருக்கான பிரிவில் 10,053 பேர், விளையாட்டுப் பிரிவில் 701 பேர், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 84 பேர், தொழிற் கல்வி பிரிவில் 1,900 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. தரவரிசை பட்டியலில் திவ்யா, சர்மிளா, மயூரன், நவீனா ஆகியோர் 200க்கு 200 மதிப்பெண் எடுத்து பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளனர். 8 பேர் இரண்டாம் இடம் பிடித்து உள்ளனர் என்றார்.

Newsletter

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி மாமன்ற உறுப்பினர் மனு: கோவை ஆட்சியருக்கு சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பின்போது தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் விசில், மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல்...

தேர்தல் சின்னமான விசில் ஒலிக்கு தடை கோரி கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மனு

கோவை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்துவது மற்றொரு அரசியல் கட்சியின் தேர்தல் சின்...

பி.என்.புதூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம்; வே.கௌதம்குமார் நினைவஞ்சலி

கோவை பி.என்.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 22-ல் தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகி...

கோவை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார். திமுக மாநில தீர்மானக் குழு செயலா...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான 100 சதவீத வாக்களிப்பு வி...

கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் 7வது தேசிய மினி பைக் பந்தயம் சிறப்பாக நடைபெற்றது

கோயம்புத்தூர் கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் மார்ச் 18 அன்று 7வது தேசிய அளவிலான மினி பைக் பந்தயம் RIVALS'26 நடைபெற்றத...