கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உறவினர்கள் இடையே நடந்த தகராறில் ஒருவர் கொலை..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில், குடிபோதையில் மருதமுத்து என்பவரை அவரது உடன்பிறந்த அண்ணன் விஜய் மற்றும் நண்பர் குமரேசன் இருவரும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில்மருதமுத்து என்பவரை அவரது உடன்பிறந்த அண்ணன் விஜி மற்றும் குமரேசன் ஆகிய இருவரும் குடிபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் 41 வயதான மருதமுத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டு எதிரில் உள்ள இவரது அண்ணன் விஜய்யின் மனைவி சித்ரா என்பவரிடம் வெளியில் பொதுவாக உள்ள பாத்ரூம் யாரும் யூஸ் பண்ண கூடாது என்று குடிபோதையில் திட்டி உள்ளார்.

பின்னர் தனது வீட்டின் முன்பு மருதமுத்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தபோது எதிரில் உள்ள அவரது அண்ணன் மனைவி சித்ரா வாசல் கூட்டியபோது அவரது சாப்பாட்டில் மண் விழுந்ததால் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அவரது அண்ணன் மகன் ரோஷன் என்பவரை மருதமுத்து கட்டையால் அடித்தும் உள்ளார்.

இதையடுத்து மருதமுத்துவின் அம்மா லட்சுமி தனது பெரிய மகன் விஜய்க்கு போன் மூலம் தகவல் சொன்னதின் பெயரில் குடிபோதையில் ஆட்டோவில் வந்த விஜய் மற்றும் அவரது நண்பர் குமரேசன் ஆகிய இருவரும் சேர்ந்து மருதமுத்து வீட்டினுள் சென்று கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் மருதமுத்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தகவல் அறிந்து பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து வருகிறார். தப்பி ஓடிய விஜய் மற்றும் குமரேசன் ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...