கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உறவினர்கள் இடையே நடந்த தகராறில் ஒருவர் கொலை..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில், குடிபோதையில் மருதமுத்து என்பவரை அவரது உடன்பிறந்த அண்ணன் விஜய் மற்றும் நண்பர் குமரேசன் இருவரும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில்மருதமுத்து என்பவரை அவரது உடன்பிறந்த அண்ணன் விஜி மற்றும் குமரேசன் ஆகிய இருவரும் குடிபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் 41 வயதான மருதமுத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டு எதிரில் உள்ள இவரது அண்ணன் விஜய்யின் மனைவி சித்ரா என்பவரிடம் வெளியில் பொதுவாக உள்ள பாத்ரூம் யாரும் யூஸ் பண்ண கூடாது என்று குடிபோதையில் திட்டி உள்ளார்.

பின்னர் தனது வீட்டின் முன்பு மருதமுத்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தபோது எதிரில் உள்ள அவரது அண்ணன் மனைவி சித்ரா வாசல் கூட்டியபோது அவரது சாப்பாட்டில் மண் விழுந்ததால் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அவரது அண்ணன் மகன் ரோஷன் என்பவரை மருதமுத்து கட்டையால் அடித்தும் உள்ளார்.

இதையடுத்து மருதமுத்துவின் அம்மா லட்சுமி தனது பெரிய மகன் விஜய்க்கு போன் மூலம் தகவல் சொன்னதின் பெயரில் குடிபோதையில் ஆட்டோவில் வந்த விஜய் மற்றும் அவரது நண்பர் குமரேசன் ஆகிய இருவரும் சேர்ந்து மருதமுத்து வீட்டினுள் சென்று கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் மருதமுத்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தகவல் அறிந்து பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து வருகிறார். தப்பி ஓடிய விஜய் மற்றும் குமரேசன் ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...