வடவள்ளி குறிஞ்சி நகரில் பைனான்சியர் வீட்டில் கொள்ளை - காவல்துறை விசாரணை

குறிஞ்சி நகரில் பைனான்சியர் வீட்டின் பூட்டை உடைத்து பத்து பவுன் நகை மற்றும் 19 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையை அடுத்த வடவள்ளி ஐ.ஓ.பி. காலனி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுந்தரம் (70). பைனான்சியர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி ஒருவர் எகிப்து நாட்டிலும், மற்றொருவர் பெங்களூரிலும் வசித்து வருகின்றனர். சுந்தரம் அவரது மனைவி பெரிய நாயகியுடன் ஐ.ஓ.பி .காலனி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 10ம் தேதி சுந்தரம் வீட்டை பூட்டி விட்டு காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி பெரியநாயகி உடன் சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று ஜூன்.17 இரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ கதவு திறந்து கிடந்தது. உள்ளே வைத்திருந்த 10 பவுன் நகை கொள்ளை அடிக்கபட்டிருந்தது. வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் இரவில் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளார். மேலும் சாமி படம் அருகில் வைத்திருந்த ரூ.19 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளான். பின்னர் இதுகுறித்து பெரியநாயகி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...