கோவையில் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4,386 பேர் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 4,386 பேர் பங்கேற்றனர். 2,946 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்பு நடைபெற்றது.


Coimbatore: ஜூன் 16 அன்று கோவையில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4,386 பேர் பங்கேற்றனர். மொத்தம் 7,332 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த போதிலும், 2,946 பேர் தேர்வெழுத வரவில்லை. இந்திய குடிமைப் பணிகள் தேர்வு, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும்.

முதல்தாள் தேர்வு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடைபெற்றது. தேர்வாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்குள் வந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு வந்த தேர்வாளர்கள், தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.



கோவை மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. பி.எஸ்.ஜி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மாநில நுண் பார்வையாளர் ஆர்.செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...