கோவையில் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4,386 பேர் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 4,386 பேர் பங்கேற்றனர். 2,946 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்பு நடைபெற்றது.


Coimbatore: ஜூன் 16 அன்று கோவையில் நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4,386 பேர் பங்கேற்றனர். மொத்தம் 7,332 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த போதிலும், 2,946 பேர் தேர்வெழுத வரவில்லை. இந்திய குடிமைப் பணிகள் தேர்வு, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும்.

முதல்தாள் தேர்வு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடைபெற்றது. தேர்வாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்குள் வந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு வந்த தேர்வாளர்கள், தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.



கோவை மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. பி.எஸ்.ஜி. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மாநில நுண் பார்வையாளர் ஆர்.செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...