உடுமலையில் விவசாயிடம் நிலம் வாங்கி ரூ.4 கோடி மோசடி செய்த நபர் தலைமறைவு - காவல்துறை தேடல்

ஆண்டிய கவுண்டனூர் கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 41 ஏக்கர் நிலத்தை ரூ. 4 கோடிக்கு வாங்கி விட்டு, பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்து வந்த விஜயகுமார் என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மானுபட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு ஆண்டிய கவுண்டனூர் கிராமத்தில் 41 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ராதாகிருஷ்ணனின் 41 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.4 கோடியே 10 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியதாக தெரிகிறது.

பணத்தை வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்வதாக விஜயகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் பரிவர்த்தனை செய்யாமல் ஏமாற்றி உள்ளார். அதன் பிறகு தொடர்ந்து கேட்ட பிறகு 37 லட்சத்து 25 ஆயிரம் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசீல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...