கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோவையில் மின்னொளி கைப்பந்து போட்டி தொடக்கம்

3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை அணி, சென்னை எஸ்.டி.ஏ.டி எக்சளன்ஸ் அணி, கோவை நிர்மலா கல்லூரி அணி, ஆத்தூர் பாரதியார் அணி, மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி உள்ளிட்ட அணிகள் விளையாட உள்ளன.


கோவை: கோவை வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் கோப்பைக்கான பகல் மற்றும் மின்னொளியில் நடைபெறும் பெண்களுக்கான கைப்பந்து போட்டிகள் கோவை கணுவாய் கே.சி.கே திருமண மண்டப வளாகத்தில் இன்று காலை தொடங்கியது.



3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை அணி, சென்னை எஸ்.டி.ஏ.டி எக்சளன்ஸ் அணி, கோவை நிர்மலா கல்லூரி அணி, ஆத்தூர் பாரதியார் அணி, மதுரை அமெரிக்கன் கல்லூரி அணிகளும், மாவட்ட அளவிலான போட்டிகளில் ஏ.பி.சி பள்ளி, அகர்வால் பள்ளி, தடாகம் அரசு பள்ளி, விவேகம் பள்ளி, கீர்த்திமான் பள்ளி உள்ளிட்ட 16 அணிகள் மோதுகின்றன.



மாவட்ட அளவிலான முதல் போட்டியை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் ஆகியோர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தும், கைப்பந்து அடித்தும் போட்டியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, விவசாய அணி எஸ்.கே.சோமசுந்தரம், ஆர்.எம்.டிரேடர்ஸ் ராஜா, பிரேமாவதி, கந்தசாமி, காளையனூர் ஜீவாநந்தம், பிரவின், அசோக் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இதில் மாநில அளவில் வெற்றி பெரும் முதல் அணிக்கு ரூ.25101 மற்றும் கோப்பையும், 2வது இடம் பெரும் அணிக்கு ரூ.20101 மற்றும் கோப்பையும், 3வது இடம் பெரும் அணிக்கு ரூ.15101 மற்றும் கோப்பையும், 4வது இடம் பெரும் அணிக்கு ரூ. 12101 மற்றும் கோப்பையும், 5வது இடம் பெரும் அணிக்கு ரூ.8101 மற்றும் கோப்பையும், அதேபோல், மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5101 மற்றும் கோப்பையும், 2வது பரிசாக ரூ.4101 மற்றும் கோப்பையும், 3வது பரிசாக ரூ.3101 மற்றும் கோப்பையும், 4வது பரிசாக ரூ.2101 மற்றும் கோப்பையும், அத்துடன் நடுவர்களுக்கு பரிசுகள், சிறந்த விளையாட்டு வீரருக்கான 5 பரிசுகள், மாநில அளவிலான 5 அணிகளுக்கும் பயணத்தொகை உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது.

மேலும் விளையாட வந்த வீராங்கணைகளுக்கு தங்க இடம் அளித்து, உணவும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.சி.கே.தனக்குமார் செய்திருந்தார்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...