இந்து யாத்திரிகர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்து யாத்திரிகர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கடந்த 09-06-2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்து யாத்திரிகர்கள் வைஷ்ணவ தேவி ஆலய தரிசனத்தை முடித்து, சிவகோரி என்ற குகை கோவிலுக்கு செல்லும் வழியில், பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், ஆன்மீகப் பயணிகளின் பேருந்தை வழி மறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 10 பேர் மரணம் அடைந்தனர். அத்துடன் 33 நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி, நிகழ்வு நமது நாட்டின் தேர்தல் முடிந்து, பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நாளில் நடந்துள்ளது மிகவும் வருத்தத்திற்கு உடைய நிகழ்வாகும்.

இதனை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. யாத்திரிகர்களுக்கு எதிரான பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியரிடம், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக, நாடு முழுவதும் மனுக்களை கொடுத்து நமது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (14-06-2024) வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மாவட்ட செயலாளர் ரவீந்திரன், பசுப் பாதுகாப்பு மாவட்ட அமைப்பாளர் கார்த்திக், தர்ம பிரசார் மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் மனு அளித்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...