இந்து யாத்திரிகர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்து யாத்திரிகர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கடந்த 09-06-2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்து யாத்திரிகர்கள் வைஷ்ணவ தேவி ஆலய தரிசனத்தை முடித்து, சிவகோரி என்ற குகை கோவிலுக்கு செல்லும் வழியில், பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், ஆன்மீகப் பயணிகளின் பேருந்தை வழி மறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 10 பேர் மரணம் அடைந்தனர். அத்துடன் 33 நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி, நிகழ்வு நமது நாட்டின் தேர்தல் முடிந்து, பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நாளில் நடந்துள்ளது மிகவும் வருத்தத்திற்கு உடைய நிகழ்வாகும்.

இதனை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. யாத்திரிகர்களுக்கு எதிரான பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியரிடம், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக, நாடு முழுவதும் மனுக்களை கொடுத்து நமது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (14-06-2024) வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மாவட்ட செயலாளர் ரவீந்திரன், பசுப் பாதுகாப்பு மாவட்ட அமைப்பாளர் கார்த்திக், தர்ம பிரசார் மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் மனு அளித்தனர்.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...