இந்து யாத்திரிகர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்து யாத்திரிகர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கடந்த 09-06-2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்து யாத்திரிகர்கள் வைஷ்ணவ தேவி ஆலய தரிசனத்தை முடித்து, சிவகோரி என்ற குகை கோவிலுக்கு செல்லும் வழியில், பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், ஆன்மீகப் பயணிகளின் பேருந்தை வழி மறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 10 பேர் மரணம் அடைந்தனர். அத்துடன் 33 நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி, நிகழ்வு நமது நாட்டின் தேர்தல் முடிந்து, பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நாளில் நடந்துள்ளது மிகவும் வருத்தத்திற்கு உடைய நிகழ்வாகும்.

இதனை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. யாத்திரிகர்களுக்கு எதிரான பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியரிடம், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக, நாடு முழுவதும் மனுக்களை கொடுத்து நமது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (14-06-2024) வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மாவட்ட செயலாளர் ரவீந்திரன், பசுப் பாதுகாப்பு மாவட்ட அமைப்பாளர் கார்த்திக், தர்ம பிரசார் மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் மனு அளித்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...