இந்து யாத்திரிகர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்து யாத்திரிகர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கடந்த 09-06-2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்து யாத்திரிகர்கள் வைஷ்ணவ தேவி ஆலய தரிசனத்தை முடித்து, சிவகோரி என்ற குகை கோவிலுக்கு செல்லும் வழியில், பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், ஆன்மீகப் பயணிகளின் பேருந்தை வழி மறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 10 பேர் மரணம் அடைந்தனர். அத்துடன் 33 நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி, நிகழ்வு நமது நாட்டின் தேர்தல் முடிந்து, பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நாளில் நடந்துள்ளது மிகவும் வருத்தத்திற்கு உடைய நிகழ்வாகும்.

இதனை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. யாத்திரிகர்களுக்கு எதிரான பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியரிடம், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக, நாடு முழுவதும் மனுக்களை கொடுத்து நமது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (14-06-2024) வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மாவட்ட செயலாளர் ரவீந்திரன், பசுப் பாதுகாப்பு மாவட்ட அமைப்பாளர் கார்த்திக், தர்ம பிரசார் மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் மனு அளித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...