மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை மூர்க்கத்தனமாக அடித்து விரட்டிய போலீஸ்! மக்கள் கடும் கண்டனம் .


திருப்பூர் மாவட்டத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினரையும் வழிமறித்த அவர்கள், தங்கள் கோரிக்கையை எடுத்து கூறினர். இதை ஏற்றுக்கொண்ட அவர். மக்களிம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 



இந்த நேரத்தில் அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் மதுக்கடை அகற்றப்படும் என்று கூறியதாக தெரிகிறது.

இதை நம்பாத அப்பகுதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அங்கு குவிந்த காவல் துறையினர் பாரபட்சமின்றி பொதுமக்களை விளாசினர். பொதுவாக போராட்ட களத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் முதியவர்களை எச்சரித்து அனுப்பும் காவல்துறை இன்று கோர தாண்டவம் ஆடியது.



வீட்டில் அடுப்படியில் கிடக்கும் பெண்ணிற்கு வீதியில் என்ன வேலை? என்று நினைத்தாரோ என்னவோ? தடி நடத்திக் கொண்டிருந்த திருப்பூர் மாவட்ட கூடுதல் டி.எஸ்.பி. பாண்டியராஜன் திடீரென பெண்கள் பக்கம் திரும்பினார். பயந்து நடுங்கிய ஒரு பெண்ணின் கண்ணத்தில் 'பொளேர்' என்று ஒரு அடி. தொடர்ந்து, வீட்டுக்கு ஓடும் பெண்களை துரத்தி துரத்தி அடிக்கிறது காவல் துறை.இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களையும் விட்டு வைக்கவில்லை.



காவல் துறையின் இத்தகைய செயலை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் கண்டனங்கள் பெருகி வருகிறது.

பெண்கள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திய திருப்பூர் கூடுதல் டி.எஸ்.பி.பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பத்திரிக்கையாளர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய நிகழ்வை எண்ணிப் பார்க்கையில்பு ரட்சி கண்டு, போராட்டம் கண்டு மீட்டெடுத்த பெண்ணுரிமை இன்று கண்ணம் வீங்கி அமர்ந்ததோ என தோன்றுகிறது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...