உடுமலை அருகே வளையபாளையத்தில் தென்னைமரங்களை வேரோடு பிடுங்கி காட்டு யானைகள் அட்டகாசம்

வளையபாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் ஐந்து வருடங்களாக வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தின. சேதமடைந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வளையபாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்து ஐந்து வருடமாக பராமரிக்கப்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது.

மேலும் அப்பகுதியில் உள்ள மின் வேலியையும் சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.



பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறையினரிடம் பேசிய விவசாயிகள், காட்டு யானைகள் கடந்த சில தினங்களாகவே விவசாய நிலங்களுக்குள் வந்த வண்ணம் உள்ளது.

எனவே வனத்துறையினர் சுற்றுகாவல் பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான தென்னை மரங்களுக்கும் மின்வேலிக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...