தாராபுரம் அருகே கிராம சாலைப்பகுதியில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை – பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

கவுண்டச்சி புதூர் ஊராட்சி எல்லைப்பகுதியில், சுப்பிரமணியபுரம், ராம் நகர், கொண்டாரசம்பாளையம், உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கவுண்டச்சி புதூர் ஊராட்சி. இதன் எல்லைப் பகுதியில் உடுமலை செல்லும் சாலையில் உள்ள சுப்பிரமணியபுரம், ராம் நகர், கொண்டாரசம்பாளையம், உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தபொதுமக்களில் சிலரும், தாராபுரம் நகராட்சி பகுதியில் பிராய்லர் கோழி இறைச்சி கடைகள் வைத்திருக்கும் பலரும் இரவோடு, இரவாக அதன் கழிவுகளை கொட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.



இந்நிலையில்குப்பைகளால் சுப்பிரமணியபுரம், கொண்டரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கும், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலையில் சுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் குப்பை கொட்டப்படும் இடம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், கவுண்டச்சி ஊராட்சி செயலாளர் நாகராஜ், மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

குப்பைகளை பத்து நாட்களுக்குள் அகற்றாவிட்டால், வரும் 23ம் தேதி தாராபுரம் உடுமலை சாலையில் தண்ணீர் பந்தல் அருகே சாலை மறியலில் ஈடுபடுவோம் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசமாக பேசினர். பொதுமக்களை சமாதானப்படுத்திய தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் கவுண்டச்சி புதூர் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நிரந்தரமாக அகற்றி ஒரே இடத்தில் சேமிக்க தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் குப்பை கிடங்கு அமைத்து இனிவரும் காலங்களில் கவுண்டச்சி புதூர் ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

மேலும் சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நபர்களை கையும் களவுமாக பிடிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...