கோவையில் இருந்து விமானம் மூலம் காசி, அயோத்தி, கயா செல்ல ஆன்மிக சுற்றுலா - இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் அறிவிப்பு

ஜூலை 18ம் தேதி கோவையில் இருந்து காசி விஸ்வநாதர் விமான சுற்றுலா துவங்குகிறது. கோவையில் இருந்து அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், காலபைரவர் கோவில், சாரநாத் போன்ற இடங்களை காண ஆன்மிக சுற்றுலா இயக்கப்படுகிறது என்று இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தெரிவித்துள்ளது.


கோவை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இன்று ஜூன்.13 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பல்வேறு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் பாரத் கவுரவ் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லுாரிகளுக்கான கல்வி சுற்றுலா போன்றவற்றை இயக்கி வருகிறது.

இந்த ரயில் மூலமாகவும் மற்றும் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், காசி, அயோத்தி, அலகாபாத், கயா, புத்தகயா விமான சுற்றுலா, பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் வரும் ஜூலை 18ல் கோவையில் இருந்து காசி விஸ்வநாதர் விமான சுற்றுலா துவங்குகிறது.

கோவையில் இருந்து அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், காலபைரவர் கோவில், சாரநாத், கங்கா ஆரத்தி, அலகாபாத் திரி வேணி சங்கமம், பாதாள அனுமன் ஆலயம், அலகாபாத் கோட்டை, அயோத்தி ராமர் கோவில், புத்தகயாவில் உள்ள புத்தர் சிலை மற்றும் மகோபோதி ஆலயம், கயாவில் உள்ள விஷ்ணு பாத ஆலயம் போன்ற இடங்களை காண ஆன்மிக சுற்றுலா இயக்கப்படுகிறது.

மேலும் விமான கட்டணம், நட்சத்திர ஓட்டலில் தங்குமிடம், போக்குவரத்து, காலை மற்றும் இரவு உணவு, ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து கட்டணம், 41 ஆயிரத்து 150 ரூபாய். கூடுதல் விபரங்களுக்கு, 90031-40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...