தமிழக விவசாயிகளை வஞ்சித்து தமிழகத்தை சுடுகாடாக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ரயில்நிலைய முற்றுகை போராட்டம்


தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ரயில்நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில், எஸ்டிபிஐ கட்சியின் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் எ.அன்சர் செரீப் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் கோவை மண்டல தலைவர் எ.முஸ்தபா, மத்திய மாவட்டத் தலைவர் எ.எ.அப்துல் காதர், மேற்கு மாவட்டத் தலைவர் செய்யது இப்ராஹிம், எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட வர்த்தக அணி தலைவர் அப்துல் ரஹீம், கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் எ.முகம்மது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சிவக்குமார், அப்பாஸ், புருஷோத் பாபு, இப்ராஹிம் பாதுஷா, ஈசாக், தொழிற்சங்க நிர்வாகிகள், வர்த்தக அணி நிர்வாகிகள் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, இம்முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...