அங்கலக்குறிச்சி அருகே தோட்டத்தில் கோழியை விழுங்கிக்கொண்டிருந்த 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

அங்கலக்குறிச்சியில் சிவராமன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கோழியை விழுங்கிக்கொண்டிருந்த 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு ஆழியார் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியில் விவசாயி சிவராமன் என்பவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று ஜூன்.12 வழக்கம் போல கோழிகளை திறந்து விடுவதற்காக கோழி கூண்டுக்கு அருகே செல்லும் போது, அங்கே மலைப் பாம்பு ஒன்று கோழியை விழுங்கியவாறு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், கோழி கூண்டில் மறைந்திருந்த சுமார் 11 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக பிடித்தனர்.



பின்னர் ஆழியார் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அந்த மலைபாம்பு விடுவிக்கப்பட்டது. தற்போது மழைக்காலம் என்பதால் புதர் பகுதிகளில் பாம்புகள் முகாமிடுவதால்,, பொதுமக்கள் தாங்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் புதர் மண்டி இருக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் எனவும், பொதுமக்கள் தங்களை சுற்றி உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...