இஸ்லாமியர்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் இடமில்லை; பல்சமய நல்லுறவு இயக்கத்தார் கண்டனம்

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு எந்த பதவியும் தரப்படாமல் புறக்கணிக்கப்படும் நிலையில், பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் இதனை கண்டித்துள்ளனர். கோவையில் ஹாஜி ஜெ. முகமது ரஃபி இதனை தெரிவித்தார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையிலே, பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், ஒன்றியத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சர்களும் பதவி ஏற்றிருக்கின்றனர். கேபினட் அமைச்சர்கள் முதல் இணை அமைச்சர்கள் வரை பொறுப்பேற்ற நிலையில், இஸ்லாமியர்களில் ஒருவருக்கு கூட அமைச்சரவையில் இடம் தரவில்லை.

இந்திய வரலாற்றில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட இல்லாத, இஸ்லாமியர்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முதல் அரசாங்கம் மோடி அரசாங்கம் என விமர்சனங்கள் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையிலே, பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் மோடி தலைமையிலான அரசாங்கத்தை, பாஜக செயல்பாட்டினை கடுமையாக விமர்சித்து கண்டித்திருக்கின்றனர்.



இன்று கோவையில் பத்திரிகையாளர்கள் சந்தித்த அந்த அமைப்பின் மாநில தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி, இந்திய தேசம் ஆங்கிலேயர்களிடம் அடிபட்டு அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் இன்னுயிர் நீத்த இந்தியர்களில் இஸ்லாமியர்கள் பங்கு அளப்பரியது. உயிர் உடைமைகளை இஸ்லாமியர்கள் இழந்து நாட்டின் சுதந்திரத்துக்கு தியாகம் செய்திருக்கின்றனர். 140 கோடி இந்தியர்களில் 20 கோடிக்கும் மேலாக இஸ்லாமியர்கள், இந்தியாவில் இந்தியர்களாக வாழும் நிலையில், இந்தியாவின் தலையெழுத்தை நிர்மாணிக்கும் பாராளுமன்ற ஒன்றிய அமைச்சரவையில் இடம் தராமல் புறக்கணித்தது வறுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்திய தேசத்தின் குடிமகன்களாக இந்திய தேசத்தின் ஜனநாயக கட்டமைப்பை மதித்து வாழும் இஸ்லாமியர்கள், இந்தியாவின் அரசியலமைப்பு அதிகார இடத்தில் பிரதிநிதித்துவம் பெற்று அங்கம் வகிப்பது அவசியமானதாக இருக்கின்றன. பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், சிறுபான்மை இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படும் விமர்சனங்களுக்கு, இந்த விடயம் ஒரு உதாரணமாக அமைந்திருக்கின்றன.

எனவே மதச்சார்பற்ற பன்முகம் தன்மை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா என்பதை நிலைநாட்டும் வகையில், மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி தலைமையிலான அரசாங்கம், இஸ்லாமியர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தர வேண்டுமென அறிவுறுத்துகின்றோம் என அவர் தெரிவித்திருக்கின்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...