இஸ்லாமியர்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் இடமில்லை; பல்சமய நல்லுறவு இயக்கத்தார் கண்டனம்

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு எந்த பதவியும் தரப்படாமல் புறக்கணிக்கப்படும் நிலையில், பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் இதனை கண்டித்துள்ளனர். கோவையில் ஹாஜி ஜெ. முகமது ரஃபி இதனை தெரிவித்தார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையிலே, பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், ஒன்றியத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சர்களும் பதவி ஏற்றிருக்கின்றனர். கேபினட் அமைச்சர்கள் முதல் இணை அமைச்சர்கள் வரை பொறுப்பேற்ற நிலையில், இஸ்லாமியர்களில் ஒருவருக்கு கூட அமைச்சரவையில் இடம் தரவில்லை.

இந்திய வரலாற்றில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட இல்லாத, இஸ்லாமியர்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முதல் அரசாங்கம் மோடி அரசாங்கம் என விமர்சனங்கள் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையிலே, பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் மோடி தலைமையிலான அரசாங்கத்தை, பாஜக செயல்பாட்டினை கடுமையாக விமர்சித்து கண்டித்திருக்கின்றனர்.



இன்று கோவையில் பத்திரிகையாளர்கள் சந்தித்த அந்த அமைப்பின் மாநில தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி, இந்திய தேசம் ஆங்கிலேயர்களிடம் அடிபட்டு அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் இன்னுயிர் நீத்த இந்தியர்களில் இஸ்லாமியர்கள் பங்கு அளப்பரியது. உயிர் உடைமைகளை இஸ்லாமியர்கள் இழந்து நாட்டின் சுதந்திரத்துக்கு தியாகம் செய்திருக்கின்றனர். 140 கோடி இந்தியர்களில் 20 கோடிக்கும் மேலாக இஸ்லாமியர்கள், இந்தியாவில் இந்தியர்களாக வாழும் நிலையில், இந்தியாவின் தலையெழுத்தை நிர்மாணிக்கும் பாராளுமன்ற ஒன்றிய அமைச்சரவையில் இடம் தராமல் புறக்கணித்தது வறுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்திய தேசத்தின் குடிமகன்களாக இந்திய தேசத்தின் ஜனநாயக கட்டமைப்பை மதித்து வாழும் இஸ்லாமியர்கள், இந்தியாவின் அரசியலமைப்பு அதிகார இடத்தில் பிரதிநிதித்துவம் பெற்று அங்கம் வகிப்பது அவசியமானதாக இருக்கின்றன. பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், சிறுபான்மை இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படும் விமர்சனங்களுக்கு, இந்த விடயம் ஒரு உதாரணமாக அமைந்திருக்கின்றன.

எனவே மதச்சார்பற்ற பன்முகம் தன்மை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா என்பதை நிலைநாட்டும் வகையில், மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி தலைமையிலான அரசாங்கம், இஸ்லாமியர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தர வேண்டுமென அறிவுறுத்துகின்றோம் என அவர் தெரிவித்திருக்கின்றார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...