திருமண வீடியோவை வழங்காத ஸ்டுடியோ உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டும் - கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருமண வீடியோவை வழங்காமல் இழுத்தடித்த நாட் போட்டோகிராபி நிறுவனம் இந்துமதி, கே.மயில்சாமி ஆகியோருக்கு ஸ்டூடியோ உரிமையாளர் பெற்ற பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்துடன் சேர்ந்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும், கோர்ட்டு செலவிற்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த இந்துமதி, கே.மயில்சாமி ஆகியோர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் எங்கள் குடும்ப திருமண நிகழ்வை வீடியோவில் பதிவு செய்யவும், போட்டோ எடுக்கவும் கோவை காந்திபுரத்தில் உள்ள நாட் போட்டோகிராபி நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தோம். இதற்காக முன் பணமாக ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் பெற்றுக் கொண்டனர்.

திருமணத்தை பதிவு செய்த பின்னர் வீடியோ மற்றும் போட்டோவை கொடுக்கவில்லை. பின்னர் அந்த நிறுவனத்தை மூடிவிட்டு வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்து விட்டனர். அந்த முகவரியை அறிந்து அங்கு சென்று கேட்டோம். ஆனால் பணத்தை திரும்பி தரவில்லை. வீடியோ கிடைக்காததால் குடும்ப உறுப்பினர்களிடம் காண்பிக்க முடியவில்லை.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட ஸ்டுடியோ உரிமையாளர் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு ஸ்டூடியோ உரிமையாளர் பெற்ற பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை வழங்குவதுடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும், கோர்ட்டு செலவிற்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...