திருமண வீடியோவை வழங்காத ஸ்டுடியோ உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டும் - கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருமண வீடியோவை வழங்காமல் இழுத்தடித்த நாட் போட்டோகிராபி நிறுவனம் இந்துமதி, கே.மயில்சாமி ஆகியோருக்கு ஸ்டூடியோ உரிமையாளர் பெற்ற பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்துடன் சேர்ந்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும், கோர்ட்டு செலவிற்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த இந்துமதி, கே.மயில்சாமி ஆகியோர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் எங்கள் குடும்ப திருமண நிகழ்வை வீடியோவில் பதிவு செய்யவும், போட்டோ எடுக்கவும் கோவை காந்திபுரத்தில் உள்ள நாட் போட்டோகிராபி நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தோம். இதற்காக முன் பணமாக ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் பெற்றுக் கொண்டனர்.

திருமணத்தை பதிவு செய்த பின்னர் வீடியோ மற்றும் போட்டோவை கொடுக்கவில்லை. பின்னர் அந்த நிறுவனத்தை மூடிவிட்டு வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்து விட்டனர். அந்த முகவரியை அறிந்து அங்கு சென்று கேட்டோம். ஆனால் பணத்தை திரும்பி தரவில்லை. வீடியோ கிடைக்காததால் குடும்ப உறுப்பினர்களிடம் காண்பிக்க முடியவில்லை.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட ஸ்டுடியோ உரிமையாளர் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு ஸ்டூடியோ உரிமையாளர் பெற்ற பணம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை வழங்குவதுடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை மன உளைச்சலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும், கோர்ட்டு செலவிற்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...