கோவையில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றி சாதனை – கூட்டு முயற்சியை காரணம் என அதிகாரிகள் பெருமிதம்

கோவை விமான நிலையத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி காலை ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் 168 பயணிகளுக்கு பதில் 100 பேர் மட்டுமே சென்றனர். இதனால் பயணிகளின் உடைமைகள் வைக்கும் பகுதியில் 5 டன் சரக்குகள் ஏற்றி அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்,


கோவை: கோவையில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சரியான திட்டமிடல் மற்றும் கூட்டு முயற்சியே இந்த சாதனைக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக பயணிகள் செல்லும் விமானங்களில் குறைந்த எடை கொண்ட சரக்குகளை மட்டுமே கையாள முடியும். இந்நிலையில் சமீபத்தில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் என இரண்டு வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்படுகிறது. இத்தகைய விமானங்களில் ஒவ்வொரு முறையும் 168 பயணிகள் வரை பயணிப்பது வழக்கம். சில நாட்கள் பயணிகளின் இருக்கைகள் குறைவாக புக்கிங் செய்யப்படும். அதுபோன்ற நேரங்களில் சரக்குகள் சற்று கூடுதலாக ஏற்ற வாய்ப்பு கிடைக்கும். கோவை விமான நிலையத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி காலை ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் 168 பயணிகளுக்கு பதில் 100 பேர் மட்டுமே சென்றனர். இதனால் பயணிகளின் உடைமைகள் வைக்கும் பகுதியில் இடவாய்ப்பு சற்று அதிகம் கிடைத்தது.

உடனடியாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் அதிக சரக்குகளை ஏற்ற திட்டமிட்டனர். அன்றைய தினம் ஜவுளிப்பொருட்கள் மற்றும் தொழில்துறையில் பயன்படுத்தப்படும். பொருட்கள் ஏற்றுமதிக்காக வால்வு ஷார்ஜாவுக்கு புக்கிங் செய்யப்பட்டிருந்தன. வழக்கமாக 3.5 டன் வரை மட்டுமே ஏற்றப்படும். இந்நிலையில் 5 டன் வரை சரக்குகள் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டன. கூட்டு முயற்சியால் சாதனை படைத்தனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்தில் மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 150 டன், வெளிநாட்டு பிரிவில் 800 டன் முதல் 850 டன் வரை என மாதந்தோறும் சராசரியாக 950 டன் முதல் 980 டன் வரை சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. காய்கறிகள், ஜவுளிப்பொருட்கள், வார்ப்படம், வால்வு உள்ளிட்ட இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த மார்ச் மாதம் உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்தை சேர்த்து 1,000 டன்னுக்கு அதிகமாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...