தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்த காவல்துறை

தாராபுரம் பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த இரண்டாம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டிஸ்வரன் என்பவரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியிலுள்ள அண்ணா நகர் பகுதியில் கடந்த இரண்டாம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் வாகனம் திருடப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



இந்த புகாரின் பேரில் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மேற்பார்வையில் தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், சிவராஜ் மற்றும் தலைமை காவலர்கள் ராஜன், கலைச்செல்வன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வந்தனர்.

இதேபோன்று உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திலும் இரு சக்கர வாகனம் காணாமல் போன வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலைப்பேட்டைக்கு சென்ற தனிப்படை காவலர்கள் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடித்தனர்.

குற்றவாளி தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்த சின்னமுத்து என்பவரது மகன் பாண்டிஸ்வரன் வயது 22 என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இவர் தாராபுரத்தில் கடந்த இரண்டாம் தேதி இருசக்கர வாகனம் திருடியதை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளியை திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...