விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூட்டணி தலைவர்கள் முடிவு – கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி

ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு துறைகளில் நேர்மையானவர்களை, திறமையானவர்களை பிரதமர் தேர்ந்தெடுத்ததிருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கிற மத்திய அரசு மூன்றாவது முறை இந்தியாவை வல்லரசாக மாற்றும்.

ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவை பல்வேறு துறைகளில் சரியான முறைகளில் வழிநடத்தக்கூடிய நேர்மையானவர்களை திறமையானவர்களை பிரதமர் தேர்ந்தெடுத்ததிருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொருத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முடிவெடுப்பார்கள்.

நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் சில வருடங்களாக வெளி மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் வெகு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தயவுகூர்ந்து கல்வியை அரசியலாக வேண்டாம், மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...