கோவை புலியகுளம் அரசு மகளிர் கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்

அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவுக்கு இன்றும் பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, வரும் 12ம் தேதியும், பி.ஏ., தமிழ் பாடப் பிரிவுக்கு 14ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.


கோவை: கோவை அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு இன்று துவங்கியது.



அரசு மகளிர் கல்லூரியில் பி.காம் பாடப்பிரிவுக்கு இன்றும், பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய

பாடப்பிரிவுகளுக்கு, வரும் 12ம் தேதியும், பி.ஏ., தமிழ் பாடப் பிரிவுக்கு 14ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.



கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்கள், அசல் ஜாதிச் சான்றிதழ், இரண்டு நகல்கள், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட்சைஸ் புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும். சேர்க்கை கட்டணம் தொடர்பான விவரங்களை, www. gascwcbe.ac.in என்ற இணையதள முகவரி யில் தெரிந்து கொள்ளலாம்.



கலந்தாய்வு குறித்து கல்லூரி முதல்வர் வீரமணி கூறுகையில், காலை 9:30 மணிக்கு கலந்தாய்வு துவங்கும். மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள், கல்லூரிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். மாணவியருடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர், மட்டுமே வர வேண்டும். சேர்க்கை கிடைத்தவுடன், அன்றே கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...