கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் புற்றுநோயிலிருந்து மீண்டோர் தின விழா

புற்றுநோயிலிருந்து மீண்டோர் தின விழாவில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையிலிருந்து வெற்றிகரமாக குணமாகி வந்த 100 க்கும் மேற்பட்டோர், தீபங்களை ஏற்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.


கோவை: கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் புற்றுநோயிலிருந்து மீண்டோர் தின விழா இன்று அனுசரிக்கப்பட்டது. ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையிலிருந்து வெற்றிகரமாக குணமாகி வந்த 100 க்கும் மேற்பட்டோர், 'நம்பிக்கையின் ஒளி' என்ற 'புற்றுநோய் என்பது முடிவல்ல, நம்பிக்கையுடன் அதை வெள்ளலாம்' என்பதை பிரதிபலிக்கும் விதமாக, தீபங்களை ஏற்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.



அவர்களுடன், சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஆலோசகர்களும் தீபங்களை ஏற்றி, புற்றுநோய் பாதித்த அனைவரும் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு, நோயிலிருந்து மீண்டுவர இயலும் என்று நம்பிக்கை தந்தனர். நிகழ்ச்சிக்கு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, டாக்டர்G.மனோகரன் தலைமை தாங்கினார்.



புற்றுநோய் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர். சிவநேசன் மற்றும் டாக்டர் கார்த்திகா மேடை சிறப்பாளர்களாக இருந்தனர். புற்றுநோயளர்களின் சிகிச்சை செலவில் பங்குகொண்டு, உறுதுணையாக நின்று பெரிதும் உதவிய, நன்கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, பிரபல மனநல மருத்துவர், டாக்டர்.ஜெயப்பிரகாஷ் ஜெகதீசன், புற்றுநோய் பாதிப்பின் போதும் பின் சிகிச்சையின் போதும், ஏற்படும் மனரீதியான பிரச்சனைகள் குறித்தும் அதனை வெற்றிகரமாக கையாளும் விதம் குறித்தும் பேசினர். தொடர்ந்து, பிரபல பேச்சாளர் டாக்டர் ஷர்மிளா பானு அவர்கள் குறைகள் இருந்த போதிலும், தன்னம்பிக்கையுடன் சாதனை புரிந்தவர்கள் குறித்து பேசி புற்றுநோயளர்களை ஊக்குவித்தார்.



நிகழ்ச்சியின் நிரலாக, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின், மாற்று மருத்துவர் டாக்டர் சுப்ரமணிய காந்தி, நோய் வலி மேலாண்மைக்கான யோகா மற்றும் மூச்சு பயிற்சிகளை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் விளக்கினார்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...