கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைதானவரின் சொத்துக்கள் பறிமுதல்

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பின் நிர்வாகி சுபைர், கடந்த 2012-ம் ஆண்டு தனது பெயரில் வாங்கிய சொத்துகளை கடந்த 2020-ம் ஆண்டு தானமாக அவரது தாயாரின் பெயருக்கு மாற்றினார். என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு உத்தரவின் பேரில் சுபைரின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று ஜூன்.7 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் சசிக்குமார். இவர் துடியலூர் அருகே கடந்த (22.09.2016) அன்று ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. என்ற பாப்புலர்பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுபைர், முபாரக், ரபியுல் ஹாசன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு 2018-ம் ஆண்டு என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து பூந்தமல்லி கோர்ட்டில் என.ஐ.ஏ. சார்பில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2022 முதல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் பி.எப்.ஐ. அமைப்பின் நிர்வாகியான சுபைர் கடந்த 2012-ம் ஆண்டு தனது பெயரில் வாங்கிய சொத்துகளை கடந்த 2020-ம் ஆண்டு தானமாக தனது தாயாரின் பெயருக்கு மாற்றி உள்ளது தெரியவந்தது.

குற்றச்செயல் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த சொத்து மாற்றம் நடந்ததால், சுபைருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை முறியடிக்கும் முயற்சியாக என்.ஐ.ஏ.வால் பார்க்கப்பட்டது. 2023-ம் ஆண்டில் யு.ஏ.(பி) சட்டத்தின் 33-ன் கீழ் கூறப்பட்ட சொத்தை இணைத்து பறிமுதல் செய்ய உத்தரவிடக்கோரி என்.ஐ.ஏ. சார்பில் சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு உத்தரவின் பேரில் சுபைரின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு இந்த வழக்குடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...