உணவு பாதுகாப்பு துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம்


கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் தலைமையில் அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அச்சிடப்பட்ட செய்தி தாள்களில் உணவு பொருட்களை பொட்டலமிடுவதற்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும், தடையினை மீறி பயன்படுத்தும் போது பறிமுதல் செய்வதோடும் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் குளிர்பான கடைகள், தர்பூசணி பழக் கடைகள், பழச்சாறு விற்பனை நிலையம், ஐஸ் க்ரீம் கடைகள் மற்றும் சாலையோர மாலை நேர சிற்றுண்டி கடைகள் நடத்தும் உணவு வணிகர்களிடம் பாதுகாப்பான குடிநீர், செயற்கை நிறமி இல்லாத உணவு பொருட்கள், ஒரு முறை உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகப்படுத்துதல் கூடாது என்றும், இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், பாதுகாப்பற்ற மற்றும் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் புகார்களை 0422- 2220922 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை உணவு பாதுகாப்பு பிரிவு நியமண அலுவலர் தெரிவித்துள்ளார்.



Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...