அன்னூரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: மக்கள் அவதி

கோவை - சத்தி சாலையில் உள்ள பாலத்தில் சிலர் மண்ணை கொட்டி அடைத்துள்ளதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் போனதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.


Coimbatore: கோவை, அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன்.4 இரவு பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக அன்னூர் கோவன் குளம் நிரம்பிய நிலையில் காணப்பட்டது. 

இந்த நிலையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அன்னூர் கோவன் குளம் முழு கொள்ளவை எட்டியது. இதையடுத்து அந்த குளத்தில் உபரி நீர் வெளியேறி வருகிறது. உபரி நீர் செல்லும் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மழைநீர் தாழ்வான பகுதிகளுக்குள் சென்றது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

குறிப்பாக அன்னூர் புவனேஸ்வரி நகர் மற்றும் பழனி கிருஷ்ணா நகர் அவென்யூ உள்ளிட்ட குடியிருப்புகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு முறையும் குளம் நிரம்பும் போதெல்லாம் இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவதாக குற்றம் சாட்டும் இப்பகுதி மக்கள், கோவை - சத்தி சாலையில் உள்ள பாலத்தில் சிலர் மண்ணை கொட்டி அடைத்துள்ளதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் போனதாக குற்றம்சாட்டினர்.

இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மழைநீரை உடனடியாக அகற்றவும், இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். 

மேலும். குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் பேரூராட்சி நிர்வாகத்தினர் இன்று. ஜூன்.5 ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...