கோவை மருதமலையில் இருந்த யானை உடல்நலம் தேறியதால் வனப்பகுதிக்குள் விடப்பட்டது

பெண் யானைக்கு தற்போது உடல் நிலை தேறியதால், அது வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. உயிரிழக்கும் நிலையில் இருந்த யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Coimbatore: கோவை மருதமலை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. அந்த யானையுடன் நான்கு மாத ஆண் குட்டி யானையும் இருந்தது. தொடர்ந்து அந்த யானைக்கு வனத்துறையின் மருத்துவக்குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.



யானையை கிரேன் வாகனத்தின் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. யானைக்கு சத்து மாத்திரைகளை புளி வெல்லம் ஆகியவற்றுடன் இடித்து அரிசி சோற்றில் வைத்து உணவும்வழங்கப்பட்டது.



இதனிடையே, பெண் யானைக்கு தற்போது ஜூன்.3 உடல் நிலை தேறியதால், கிரேன் ரோப்புகள் கழற்றி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. இதை அடுத்து பெண் காட்டு யானையின் செயல்பாடுகளை வனத் துறையினர் கண்காணிக்க பின் தொடர்ந்து வருகின்றனர்.

உயிரிழக்கும் நிலையில் இருந்த யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...