கோவை மருதமலையில் இருந்த யானை உடல்நலம் தேறியதால் வனப்பகுதிக்குள் விடப்பட்டது

பெண் யானைக்கு தற்போது உடல் நிலை தேறியதால், அது வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. உயிரிழக்கும் நிலையில் இருந்த யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Coimbatore: கோவை மருதமலை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. அந்த யானையுடன் நான்கு மாத ஆண் குட்டி யானையும் இருந்தது. தொடர்ந்து அந்த யானைக்கு வனத்துறையின் மருத்துவக்குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.



யானையை கிரேன் வாகனத்தின் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. யானைக்கு சத்து மாத்திரைகளை புளி வெல்லம் ஆகியவற்றுடன் இடித்து அரிசி சோற்றில் வைத்து உணவும்வழங்கப்பட்டது.



இதனிடையே, பெண் யானைக்கு தற்போது ஜூன்.3 உடல் நிலை தேறியதால், கிரேன் ரோப்புகள் கழற்றி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. இதை அடுத்து பெண் காட்டு யானையின் செயல்பாடுகளை வனத் துறையினர் கண்காணிக்க பின் தொடர்ந்து வருகின்றனர்.

உயிரிழக்கும் நிலையில் இருந்த யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...