கோவை டிவிஎஸ் நகர் ரோட்டில் அரசு ஊழியர் மீது தாக்குதல் - காவல்துறை விசாரணை

வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் அரசு போக்குவரத்து கழகத்தில் டிராபிக் கண்ட்ரோலராக பணியாற்றும் தீபக் வில்சன் என்பவர் மீது காரில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை விளாங்குறிச்சி சேரன்மாநகரை சேர்ந்தவர் தீபக் வில்சன் (41). அரசு போக்குவரத்து கழகத்தில் டிராபிக் கண்ட்ரோலராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மே.30 தனது நண்பர் பொன்நிலவன் என்பவருடன் பைக்கில் கணுவாயில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது டிவிஎஸ் நகர் ரோட்டில் சென்றபோது, பின்னால் வந்த கார் அவர்களை முந்தி செல்ல முயன்றது. இதில் வழிவிடுவதில், காரில் வந்தவர்களுக்கும், தீபக் வில்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காரில் இருந்து இறங்கி வந்த 5 பேர் தகாத வார்த்தைகளால் பேசி தீபக் வில்சனை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

பின்னர் இதுகுறித்து அவர் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...