கோவை டிவிஎஸ் நகர் ரோட்டில் அரசு ஊழியர் மீது தாக்குதல் - காவல்துறை விசாரணை

வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் அரசு போக்குவரத்து கழகத்தில் டிராபிக் கண்ட்ரோலராக பணியாற்றும் தீபக் வில்சன் என்பவர் மீது காரில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை விளாங்குறிச்சி சேரன்மாநகரை சேர்ந்தவர் தீபக் வில்சன் (41). அரசு போக்குவரத்து கழகத்தில் டிராபிக் கண்ட்ரோலராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மே.30 தனது நண்பர் பொன்நிலவன் என்பவருடன் பைக்கில் கணுவாயில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது டிவிஎஸ் நகர் ரோட்டில் சென்றபோது, பின்னால் வந்த கார் அவர்களை முந்தி செல்ல முயன்றது. இதில் வழிவிடுவதில், காரில் வந்தவர்களுக்கும், தீபக் வில்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காரில் இருந்து இறங்கி வந்த 5 பேர் தகாத வார்த்தைகளால் பேசி தீபக் வில்சனை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

பின்னர் இதுகுறித்து அவர் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...