கோவை காந்திபுரத்தில் பழக்கடையில் ரூ.10,000 திருடிய 17 வயது சிறுவன் கைது

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் முத்துவேல் என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் ரூ.10,000 ஆயிரம் பணத்தை திருடிய ஏற்காட்டை சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர்.


கோவை: கோவை ரத்தினபுரி சம்பத் தெருவை சேர்ந்தவர் முத்துவேல்(55). இவர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சங்கர் என்பவர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி கல்லாவில் ரூ.10 ஆயிரம் பணத்தை வைத்து விட்டு செல்வதாக சங்கரிடம், முத்துவேல் கூறிவிட்டு சென்றார்.

மறுநாள் காலையில் சங்கர் போன் செய்து கடை உரிமையாளர் முத்துவேலிடம், பக்கத்து கடையில் வேலை செய்யும் 17 வயது சிறுவன் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுவன் பணம் திருடியது உறுதியானது. இருவரும் அவரை தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று மே.30 சிறுவன் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக முத்துவேலுக்கு தெரியவந்தது.

அங்கு சென்று அந்த சிறுவனை பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் திருடியது சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர். அவனிடம் இருந்து ரூ.1,700 பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...