கோவை மருதமலை அருகே உடல் நலம் குன்றிய பெண் யானைக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு மருத்துக்குழுவினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். தாயை பார்த்து வேதனையுடன் அருகிலேயே நின்றிருக்கும் குட்டி யானைக்கும் உணவு வழங்கி மருத்துவக்குழுவினர் பார்த்து வருகின்றனர்.


கோவை: கோவை மருதமலை அடிவார பகுதியில் இன்று மே.30 வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது, யானை பிளிரும் சத்தம் கேட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்த போது, பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது தெரியவந்தது. அந்த பெண் யானைக்கு உடல் நலம் குன்றிய நிலையில் குட்டி யானை அதன் தாய் அருகிலேயே நின்றது.



தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு சிகிச்சை அளித்து, பழங்கள் கொடுத்து கண்காணித்து வருகின்றனர்.



மேலும், தாயை பார்த்து வேதனையுடன் நிற்கும் குட்டி யானைக்கும் உணவு வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...