கோவையிலிருந்து அமெரிக்கா, கனடாவிற்கு ஜூன் 2ம் தேதி முதல் ஏர் இந்தியா விமான சேவை தொடக்கம்

டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் நியூ ஆர்க், நியூ யார்க், வாஷிங்டன், சிகாகோ, வான்கூவர் மற்றும் டொரோண்டோவிற்கு செல்ல முடியும். டெல்லியிலிருந்து கோவை வந்து சேர விமான சேவை வசதியும் உள்ளது.


கோவை: வருகின்ற ஜூன் 2ம் தேதி முதல் கோவையிலிருந்து டில்லி மற்றும் மும்பை கனெக்டிங் பிளைட் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு செல்லக்கூடிய விமான சேவை வசதியை பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா ஆரம்பிக்க உள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 2ஆம் தேதி முதல் அமெரிக்காவில் உள்ள ஐந்து நகரங்களான நியூ ஆர்க் (New Ark), நியூயார்க் (New York), வாஷிங்டன், சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோவுக்கும், கனடாவில் உள்ள வான்குவார் மற்றும் டோராண்டோ ஆகிய நகரங்களுக்கும் டெல்லி மற்றும் மும்பை வழியாக கோவையிலிருந்து செல்ல முடியும்.

ஏர் இந்தியாவின் புதிய நான்-ஸ்டாப் கோவை-டெல்லி விமான சேவை, கோவையிலிருந்து (திங்கள் - வெள்ளி மற்றும் ஞாயிறுகளில்) மாலை 6.45 மாணிக்கு புறப்பட்டு இரவு 9.50 மணிக்கு டெல்லி வந்து சேரும்.









டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் நியூ ஆர்க், நியூ யார்க், வாஷிங்டன், சிகாகோ, வான்கூவர் மற்றும் டொரோண்டோவிற்கு செல்ல முடியும். பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாகவே டெல்லி வர விமான சேவைகள் உள்ளது. பின்னர் டெல்லியிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு கோவை வந்து சேரவும் விமான சேவை உள்ளது.

அதேபோல கோவையில் இருந்து மும்பை நகருக்கு தினசரி காலை 9 மணிக்கு விமான சேவை உண்டு. காலை 9 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு மும்பையில் தரை இறங்கும்.

மும்பையில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகரத்துக்கு ஏர் இந்தியாவின் கனெக்டிங் பிளைட் மூலம் செல்ல முடியும். அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் வழியாகவே மும்பை வரவும் முடியும்.

பின்னர் மும்பையில் இருந்து காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் புறப்பட்டு காலை 8.25 மணிக்கு கோவை வந்து சேர்ந்திடலாம். இதனால் இனி கோவையில் இருந்து 7 வெளிநாட்டு நகரங்களுக்கு எளிமையாக செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...