தாராபுரம் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரம், இரண்டு லாரிகள் பறிமுதல்

ஜோதியம்பட்டி என்ற இடத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண்வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தப்பியோடிய ஓட்டுநர்களை தேடிவருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள ஜோதியம்பட்டி என்ற இடத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண்வெட்டி எடுத்து விற்பனைக்கு கொண்டு செல்வதாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் மற்றும் வட்டாட்சியர் கோவிந்தசாமி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.



அந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் உத்தரவின் பேரில் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, ஜோதியம்பட்டி பகுதியில் புல.எண் 230/6 என்ற பூமியில் சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக லாரிகள் மூலம் கிரவல் மண் அள்ளிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



சம்பவ இடத்துக்கு தாராபுரம் வட்டாட்சியர் வருவதை அறிந்த ஹிட்டாச்சி வாகன ஓட்டுனர் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுனர்கள் சாவியை எடுத்துக் கொண்டு பேட்டரி ஒயர்களை கழற்றி விட்டு தப்பி சென்றனர்.



அதன் பிறகு குண்டடம் காவல் ஆய்வாளருக்கு தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குண்டடம் போலீசார், குண்டடம் நில வாருவாய் அலுவலர், குண்டடம் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியுடன் பேட்டரி மற்றும் மாற்றுச் சாவியை பயன்படுத்தி இரண்டு லாரிகளையும் ஹிட்டாச்சி இயந்திரத்தையும் பறிமுதல் செய்து குண்டடம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி அளித்த தகவலின் பெயரில் இரண்டு லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரத்தை பறிமுதல் செய்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...