கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

2024-ஆம் ஆண்டுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுக்கான அறிவிப்பு, ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இத்தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்குகிறது என்று கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா் (வணிக வரி) ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி 1 (குரூப் 1) இல் 90 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான தோ்வு ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும் 2024-ஆம் ஆண்டுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுக்கான அறிவிப்பு, ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்குகிறது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்ற அனைவரும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநா்களைக் கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது.

இம்மையத்தில் ஸ்மார்ட் போர்டு, இலவச வை-பை வசதி, அனைத்து போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஆகியன உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தோ்வுகள், முழு மாதிரி தோ்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்படவுள்ளன.

இணையதளத்தில் பதிவுசெய்து இலவசமாக பாடக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர மின்னஞ்சல் மூலமாகவும் தொடா்புகொண்டு பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...