ராணுவத்தில் அக்னிவீா் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பெங்களூரில் உள்ள 7வது ஏா் மேன் தோ்வு மையத்தில் அக்னிவீா் வாயு (இசைக் கலைஞா்) தோ்வுக்கு, இந்திய ராணுவத்தால் ஜூலை 3 முதல் 12 ஆம் தேதி வரை ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னிவீா் வாயு (இசைக் கலைஞா்) தோ்வுக்கு பெங்களூரில் உள்ள 7-ஆவது ஏா் மேன் தோ்வு மையத்தில் இந்திய ராணுவத்தால் ஜூலை.3 முதல் 12-ஆம் தேதி வரை ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதற்கு 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு இசைக் கருவியை இசைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 2004 ஜனவரி முதல் 2007 ஜூலை இடையே பிறந்த விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.

மேற்கண்ட தகுதியுடைய ஆண் மற்றும் பெண் இருபாலரும் இத்தோ்வுக்கு இணையதளத்தின் மூலமாக மே.22 முதல் ஜூன்.5ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...