கோவை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியின் கூட்டம் இன்று நடைபெற்றது. தொண்டாமுத்தூர் அ.ரவி மற்றும் செ.அந்தோணிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ. ரவி அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.அந்தோணிராஜ் முன்னிலையில், 28.05.2024 இன்று 4.00 மணியளவில் கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பாக ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 



மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஞா.சிவக்குமார், E.M.S.ரபிதீன், சா.தினேஷ்குமார், ச.சரண்யா, ரா.மனோஜ்குமார் அனைவரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1:

தலைவர் முத்தழிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவை தொகுதி வாரியாக இரண்டு பள்ளிகளை தேர்ந்தெடுத்து, நோட்டு புத்தகங்கள் வழங்குவது.

தீர்மானம் 2:

ஒன்றிய நகர பகுதி பேரூர் கழகங்களில் மாணவர் அணி அமைப்பாளர் / துணை அமைப்பாளர் இறுதி பட்டியல் தயாரிப்பது.

தீர்மானம் 3:

வரும் கல்வியாண்டில் கோவை வடக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிலையங்களான கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளிகள், கல்லூரி விடுதிகளில் ”தமிழ் மாணவர் மன்றம்” அமைப்பை உருவாக்கி புதிய உறுப்பினர்கள் சேர்த்து, நிர்வாகிகளை நிர்வகிக்கும் பணியினை விரைவாக துவக்கிட மாவட்ட துணை அமைப்பாளர்களுக்கு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டியில், மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதல் பரிசு பெற்ற நான்கு நபர்களை அழைத்து செல்வது.

தீர்மானம் 5:

நடப்பாண்டிற்கான முத்தழிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவிற்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை மீண்டும் ஜூலை மாதத்தில் நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது.

தீர்மானம் 6:

கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் பணியாற்ற வாய்ப்பு வழங்கிய மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் 7:

மாணவர் அணியை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய மாநில மாணவர் அணி செயலாளர் CVMP.எழிலரசன், MLA அவர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள், மாநில இணைச் செயலாளர் S.மோகன் அவர்கள், மாநில துணைச் செயலாளர் கா.பொன்ராஜ் அவர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஞா.சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...