கோவை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியின் கூட்டம் இன்று நடைபெற்றது. தொண்டாமுத்தூர் அ.ரவி மற்றும் செ.அந்தோணிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ. ரவி அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.அந்தோணிராஜ் முன்னிலையில், 28.05.2024 இன்று 4.00 மணியளவில் கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பாக ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 



மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஞா.சிவக்குமார், E.M.S.ரபிதீன், சா.தினேஷ்குமார், ச.சரண்யா, ரா.மனோஜ்குமார் அனைவரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1:

தலைவர் முத்தழிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவை தொகுதி வாரியாக இரண்டு பள்ளிகளை தேர்ந்தெடுத்து, நோட்டு புத்தகங்கள் வழங்குவது.

தீர்மானம் 2:

ஒன்றிய நகர பகுதி பேரூர் கழகங்களில் மாணவர் அணி அமைப்பாளர் / துணை அமைப்பாளர் இறுதி பட்டியல் தயாரிப்பது.

தீர்மானம் 3:

வரும் கல்வியாண்டில் கோவை வடக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிலையங்களான கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளிகள், கல்லூரி விடுதிகளில் ”தமிழ் மாணவர் மன்றம்” அமைப்பை உருவாக்கி புதிய உறுப்பினர்கள் சேர்த்து, நிர்வாகிகளை நிர்வகிக்கும் பணியினை விரைவாக துவக்கிட மாவட்ட துணை அமைப்பாளர்களுக்கு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டியில், மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதல் பரிசு பெற்ற நான்கு நபர்களை அழைத்து செல்வது.

தீர்மானம் 5:

நடப்பாண்டிற்கான முத்தழிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவிற்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை மீண்டும் ஜூலை மாதத்தில் நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது.

தீர்மானம் 6:

கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் பணியாற்ற வாய்ப்பு வழங்கிய மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் 7:

மாணவர் அணியை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய மாநில மாணவர் அணி செயலாளர் CVMP.எழிலரசன், MLA அவர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள், மாநில இணைச் செயலாளர் S.மோகன் அவர்கள், மாநில துணைச் செயலாளர் கா.பொன்ராஜ் அவர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஞா.சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...