தாராபுரத்தில் விற்பனைக்காக கொண்டு வந்த மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் - வட மாநில தொழிலாளி கைது

தாராபுரம் பகுதி பழனி பைபாஸ் சாலையில் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டுவந்த வடமாநிலத்தை சேர்ந்த சபிலா குமாரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனி பைபாஸ் சாலை அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு காவல் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் துறை ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையில் மதுவிலக்கு போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தாராபுரம் முதல் கரூர் வரை செல்லும் பழனி பைபாஸ் சாலை அருகே உள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தார்.



இதனால் சந்தேகமடைந்து மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜாராம் குமார் என்பவரின் மகன் சபிலா குமார் வயது 27 என்பது தெரியவந்தது. சபிலா குமார் அவிநாசி எம்.நாதம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

சபிலா குமார் அவ்வப்போது ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு வந்து திருப்பூர், ஈரோடு, தாராபுரம், பழனி ஆகிய பகுதிகளில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்களிடம் விற்பனை செய்வது தெரியவந்தது.

அதேபோன்று இன்று தாராபுரம் பகுதியில் பழனி பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்த சபிலா குமார் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வந்திருந்தார். இதைத்தொடர்ந்து மதுவிலக்கு காவல்துறையினர் சபிலா குமாரை கைது செய்து அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...