தாராபுரம் அருகே தேங்காய் மஞ்சி குடோனில் தீ விபத்து – ரூ.80 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் மஞ்சு சேதம்

தொட்டிபாளையம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான தேங்காய் மஞ்சி குடோனில் திடீர் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை நான்கு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் மஞ்சு சேதமானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொட்டிக்காம்பாளையம் அருகே உள்ளதொட்டிபாளையம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ சரவணா கையர்ஸ் என்ற பெயரில் தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது.

தேங்காய் மட்டையிலிருந்து மஞ்சை பிரித்தெடுத்து அதிலிருந்து பதப்படுத்தப்பட்ட தேங்காய் நாரை பிரித்தெடுத்து இயந்திரங்கள் மூலம் பண்டல்கள் ஆக இந்த கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கேரளா மற்றும் நாகர்கோவில், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து தேங்காய் நார்கள் விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.



கடந்த ஒரு மாதமாக ரூ.80 லட்சம் மதிப்புள்ள தேங்காய் நார்கள் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மதியம் 1மணி அளவில்தேங்காய் மஞ்சி அடுக்கி வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தேங்காய் மஞ்சியில்தீ பற்றியது.

மளமளவென்று கிடங்கு முழுவதும் பரவியதால், தீயை கட்டுப்படுத்த முடியாத தொழிலாளர்கள் தாராபுரம் மற்றும் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4மணி நேரம்போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தேங்காய் மஞ்சி பண்டல்கள் முற்றிலுமாக தீயில் கருகி சேதமானது.தீ விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...