தாராபுரம் அருகே தேங்காய் மஞ்சி குடோனில் தீ விபத்து – ரூ.80 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் மஞ்சு சேதம்

தொட்டிபாளையம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான தேங்காய் மஞ்சி குடோனில் திடீர் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை நான்கு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் மஞ்சு சேதமானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொட்டிக்காம்பாளையம் அருகே உள்ளதொட்டிபாளையம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ சரவணா கையர்ஸ் என்ற பெயரில் தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது.

தேங்காய் மட்டையிலிருந்து மஞ்சை பிரித்தெடுத்து அதிலிருந்து பதப்படுத்தப்பட்ட தேங்காய் நாரை பிரித்தெடுத்து இயந்திரங்கள் மூலம் பண்டல்கள் ஆக இந்த கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கேரளா மற்றும் நாகர்கோவில், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து தேங்காய் நார்கள் விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.



கடந்த ஒரு மாதமாக ரூ.80 லட்சம் மதிப்புள்ள தேங்காய் நார்கள் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மதியம் 1மணி அளவில்தேங்காய் மஞ்சி அடுக்கி வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தேங்காய் மஞ்சியில்தீ பற்றியது.

மளமளவென்று கிடங்கு முழுவதும் பரவியதால், தீயை கட்டுப்படுத்த முடியாத தொழிலாளர்கள் தாராபுரம் மற்றும் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4மணி நேரம்போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தேங்காய் மஞ்சி பண்டல்கள் முற்றிலுமாக தீயில் கருகி சேதமானது.தீ விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...