கோவை எம்ஜிஆர் மார்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவு – ஒரு கிலோ தக்காளி ரூ.55 விற்பனை

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் 25 கிலோ கொண்ட தக்காளிப்பெட்டி ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (மே.27) ரூ.1,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கோடை மழை பெய்து வந்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தை பொருத்தவரை தொண்டாமுத்தூர், நரசிபுரம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் அதிகளவு தக்காளி விளைவிக்கப்படுகிறது.

கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டுக்கு தினமும் 200 டன் முதல் 250 டன் வரை தக்காளி வந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது 120 டன் அளவிற்கு தக்காளி வருகிறது.

இதன் காரணமாக கடந்த வாரம் 25 கிலோ கொண்ட தக்காளிப்பெட்டி ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (மே.27) ரூபாய் 1,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கோவையில் தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ ரூ.55-க்கு விற்பனையாகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...