கோவை எம்ஜிஆர் மார்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவு – ஒரு கிலோ தக்காளி ரூ.55 விற்பனை

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் 25 கிலோ கொண்ட தக்காளிப்பெட்டி ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (மே.27) ரூ.1,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கோடை மழை பெய்து வந்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தை பொருத்தவரை தொண்டாமுத்தூர், நரசிபுரம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் அதிகளவு தக்காளி விளைவிக்கப்படுகிறது.

கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டுக்கு தினமும் 200 டன் முதல் 250 டன் வரை தக்காளி வந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது 120 டன் அளவிற்கு தக்காளி வருகிறது.

இதன் காரணமாக கடந்த வாரம் 25 கிலோ கொண்ட தக்காளிப்பெட்டி ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (மே.27) ரூபாய் 1,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கோவையில் தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ ரூ.55-க்கு விற்பனையாகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...