சமயபுரம் அருகே வெல்ஸ்புரம் ஊருக்குள் பாகுபலி காட்டு யானை உலா - சிசிடிவி வீடியோ வைரல்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை வெல்ஸ்புரம் வழியாக குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உலா வந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியையொட்டி சமயபுரம் என்னும் சிறு கிராமம் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சமயபுரம் சாலையில் போக்குவரத்து அதிகமாக காணப்படுவதோடு வன விலங்குகள் கடந்து செல்லும் பாதையாகவும் விளங்கி வருகிறது. நெல்லிமலை வனப்பகுதியில் பாகுபலி காட்டு யானை, மான், காட்டுப்பன்றிகள் மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது.

இந்த நிலையில் உணவு மற்றும் நீர் நிலைகளைத் தேடி இரவு நேரத்தில் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி காட்டு யானைகள், சமயபுரம் சாலையை கடந்து குடியிருப்புகள் வழியாக கல்லார் வனப்பகுதிக்கு செல்வதும், மீண்டும் கல்லாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறி சமயபுரம் சாலையை கடந்து நெல்லி மலை வனப்பகுதிக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

மேலும் கடந்த சில தினங்களாக சமயபுரம் பகுதியில் பாகுபலி காட்டு யானையின் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் பாகுபலி காட்டு யானை கல்லாறு வனப்பகுதிக்குள் செல்லும் வழித்தடம் தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைந்துள்ளது.

விவசாயி தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டு வனவிலங்குகள் தோட்டத்தில் புகுந்து விடுவதை தடுக்க தோட்டத்தைச் சுற்றிலும் சூரிய மின்வேலி அமைத்தார்.

இதன் காரணமாக நெல்லித்துறை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி காட்டு யானை கல்லாறு வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் தவித்தது. பின் மாற்று வழியையும் தேடி அந்த வழியாக பாகுபலி காட்டு யானை சென்றும் வந்தும் கொண்டிருந்தது.



இந்த நிலையில், பாகுபலி காட்டு யானை நேற்றிரவு (மே.26) சமயபுரம் அருகே உள்ள வெல்ஸ்புரம் ஊருக்குள் புகுந்து கம்பீரமாக உலா வந்தது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை வெல்ஸ்புரம் வழியாக குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உலா வந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.



இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...