கோவையில் இராணுவ தளவாட கண்காட்சி நடைபெற உள்ளது

கோவை கொடிசியா அரங்கில் இராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு துறை உபகரணங்களின் இரண்டு நாட்கள் கண்காட்சி வரும் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.


கோவை: இந்திய ராணுவத்தில் பயன்படுத்தபடும் பொருட்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள், உள்நாட்டில் தயாரிக்க படுகின்ற பாதுகாப்பு துறை உபகரணங்கள் தொடர்பான கண்காட்சி கோவை கொடிசியாவில் வரும் 28 ஆம் துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.



கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் கொடிசியா தலைவர் திருஞானம் மற்றும் நிர்வாகிகள் சசிக்குமார், சுந்தரம், பொன்ராம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தலைவர் திருஞானம்,



இந்திய இராணுவ துறையுடன் கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் இணைந்து சதர்ன் ஸ்டார் ஆர்மி அகாடமி இண்டஸ்ட்ரி இன்டர்பேஸ் எனும் இராணுவ தொழில் உபகரணங்கள் கண்காட்சி கோவை கொடிசியா அரங்கில் வரும் 28,29 தேதி நடைபெற உள்ளதாகவும்,இந்திய இராணுவத்தின் தக்சின் பாரத் ஏரியா எனும் தென்னிந்திய பிரிவின் கீழ் நடைபெற உள்ளது என தெரிவத்தார்.

நமது நாட்டில் தயாராகும் பாதுகாப்பு துறை உபகரணங்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தியா தனது ராணுவ தளவாட உற்பத்தியில் முழு நிறைவு பெறுவதை நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இக்கண்காட்சி அமைய உள்ளதாக தெரிவித்த அவர்.

இதில் இந்திய ராணுவ தளவாடங்கள், ராணுவ தளவாட தொழில் சார்ந்த உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த உள்ளதாக கூறினார்.

இக்கண்காட்சியில் இந்திய தரைப்படை - இந்திய விமானப்படை - இந்திய கப்பல் படை - , நிதி ஆயோக் - தொழில் துறை - தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் - முக்கிய அரசு துறை - கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த பலரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...