கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீட்டின் கேட்டில் தலையை மாட்டிய நாய் பத்திரமாக மீட்பு

வண்ணார் கோவில் பகுதியில், வீட்டின் கேட்டில் தலையை மாட்டிக்கொண்டு போராடிய நாயை, அதன் கழுத்து பகுதியில் எண்ணெய்யை ஊற்றி தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வண்ணார் கோவில் பகுதியில் வீட்டின் கேட்டில் தலை சிக்கி போராடிக்கொண்டிருந்த நாயை பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் அரை மணி நேரம் போராடி கழுத்து பகுதியில் எண்ணை ஊற்றி லாவகமாக மீட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வண்ணார் கோவில் என்ற இடத்தில் வீட்டின் கேட் ஒன்றில் நாய் ஒன்று தலை உள்ளே விட்டு மாட்டியிருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினருக்கு தகவல் வந்துள்ளது.



சம்பவ இடத்திற்குச் சென்ற நிலைய அலுவலர் கார்த்திகேஷன், சுரேஷ் குமார் மற்றும் சதீஷ் கண்ணன், வேல்முருகன், மோகன்ராஜ் ஆகியோர் நாயின் கண்களை துணி கொண்டு கட்டி, கழுத்து பகுதியில் எண்ணை ஊற்றி அரை மணி நேரம் போராடி லாவகமாக மீட்டனர்.



அந்த நாயை மீட்கும் போது அருகே அதனுடைய நண்பன் நாய் பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.

Newsletter

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...